எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் நட்டத்திற்கு முகங்கொடுத்துள்ளது

 

எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் நட்டத்திற்கு முகங்கொடுத்துள்ளது

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படாமையினால் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் கடந்த 10 மாதங்களாக நட்டத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.





இதன்காரணமாக அந்தக் கூட்டுத்தாபனம் ஏழாயிரம் கோடி ரூபா நட்டத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கான எரிபொருள் விலை சூத்திரம் முன்வைக்கப்படாமையே நட்டம் ஏற்பட்டமைக்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

விலை சூத்திரத்தை முன்வைக்க முடியாவிடின் வரிக்குறைப்பையாவது மேற்கொள்ளுமாறு நிதியமைச்சரை கோருவதாக அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post