தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு


 





தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தோட்ட  நிறுவன பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும், தோட்டத்தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனகள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Post a Comment

Previous Post Next Post