நமது மே பேரணிக்கு மக்கள் வெள்ளம் அலைமோதும்

 ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் மே தினக் கூட்டத்திற்கு சுமார் 1,40,000 பேர் கூடுவார்கள் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார்.

அந்த மக்களைக் கட்டுப்படுத்த கட்சியும் பாடுபடும் என்றும் அது கடினமான பணி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியால் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் பெருமளவான மக்கள் தமது கட்சியில் இணைந்து கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் மக்கள் போட்டியிடும் வகையில் தமது கட்சியின் பொறிமுறைமை பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post