கல்வித் துறையில் அவசியமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை எதிர்வரும்
டிசம்பர் மாதத்திற்குள் ஒழுங்கமைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி
சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடத்துதல், பெறுபேறு
வெளியிடல், பாடப் புத்தங்கள் விநியோகித்தல், பல்கலைக்கழக பிரவேசம் போன்ற
கல்வித்துறையின் நடவடிக்கைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சீரமைக்க
முடியும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை
வெளியிட்டுள்ளார்.
புதிய கல்வி அமைச்சின் செயலாளராக எம்.நிஹால்
ரணசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து
தெரிவித்தப் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியினுடனான சூழ்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்தாக அவர் தெரிவித்தார்
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் அதிகாரகளும் கலந்துக்கொண்டனர்.
Post a Comment