மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக 10,000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கத்தினால் 150 மில்லியன் ரூபா நிதியை மாவட்ட செயலகங்களுக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இடர் முகாமைத்துவ அமைச்சில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
Post a Comment