இன்றைய தினம் 14.08.2024 வவுனியா அம்மாச்சி உணவகத்தில் உணவு பரிமாறும் போது அழுக்கான வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. வாழை இலையை மாற்றி சுத்தமாக தரச் சொன்னபோது அங்கிருந்த பெண்கள் நுகர்வோருடன் முரண்பாட்டதோடு மிகத்தரக்குறைவான வார்த்தைகளால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொதுமக்கள் பலரும் வவுனியா அம்மாச்சி உணவகம் சுத்தமாக இல்லை எனவும், இது குறித்து கேட்டாலும் அங்குள்ளவர்கள் தங்களுடன் முரண்படுவதால் தாங்கள் அங்கு செல்வதில்லை என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இவ்விடயம் தொடர்பில் மாகாண விவசாய திணைக்களத்தில் எழுத்துமூலமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு. அற்புதச்சந்திரன் அவர்கள் நடந்த விடயத்தை தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Post a Comment