யாழ்ப்பாணத்தில்
பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு.
Times SriLanka FM இன் நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு ,
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு ஒன்று கடந்த
06-08-2024 அன்று நடைபெற்றது.
அந்த வகையில் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் கல்லூரியின் அதிபர் திரு M . செல்வஸ்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இளம் ஊடகவியலாளர்களை கண்டறிருந்து அவர்களுக்கான அங்கிகாரங்களை வழங்கும் நிகழ்வு வடமாகாண ஊடக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் முதலாவது நிகழ்வாக யாழ்ப்பாணம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கு சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண ஊடக அமையத்தின் தலைவர் M.G ரத்னகாந்தன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார். மாணவர்களுக்கு, ஊடகம் என்றால் என்ன, ஒரு ஊடகவியலாளர் எவ்வாறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும், மாணவர்கள் எவ்வாறு ஊடக துறையில் தமது பங்களிப்பை செலுத்த வேண்டும் , சமூக அதிகாரம் அதன் கூறுகளான தன்னலம் மற்றும் பொதுநலம் பற்றிய விளக்கங்களை மாணவர்களுக்கு தெளிவு படுத்தினார்.
Time Sri Lanka FM இன் ஊடக அனுசரணையில் நடைபெற்ற
இச் செயலமர்வானது வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் , அடுத்த கட்டமாக வட பகுதியில் உள்ள அனைத்து பாடசாலை மட்டத்தில் இந்நிகழ்வு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வில் கலந்து கொண்ட அணைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. இந்த சான்றிதழ்களுக்கான நிதியுதவியினை இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தெல்லிப்பழை பிரிவினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment